புழல்: சோழவரம் ஒன்றியம் நல்லூர் சுங்கச்சாவடி ஜிஎன்டி சாலையில் இருந்து விஜயநல்லூர், சோழவரம் புறவழிச்சாலை மற்றும் பைபாஸ் சாலை, சோழவரம் பஜார், காரனோடை பஜார், ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலை, அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, பஞ்செட்டி ஜிஎன்டி சாலை வரை சுமார் 10 கிமீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கனரக லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இவ்வழியே செல்லும் வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேற்கண்ட இந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் வழிப்பறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பாலியல் தொல்லைகளும் நடைபெற்று வருகின்றன.