போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையில் அடைப்பு

பூந்தமல்லி: போரூர் அருகே ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கண்ணன் (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ஒரு வீட்டுக்குள் திடீரென நுழைந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அந்த சிறுமி அலறி சத்தம் போட்டதும் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரான்வின் தானி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கண்ணனை நேற்று காலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரணை செய்தபோது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து கண்ணனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories: