சென்னை : கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இயக்குனர் பாலச்சந்திரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை குறித்து மேலும் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது, மேலும் தென் இந்தியாவில் தெற்கு பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு -மேற்காக திசை மாறும் பகுதி நிலவுகிறது, மேற்கு கடற்கரை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றுழத்த தாழ்வு நிலை நிலவும் நிலையில் நாளை தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குக் கூடும், என்றார்.