அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான லஞ்ச புகாரில் எந்த உண்மையும் இல்லை: பதிவாளர் குமார் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான லஞ்ச புகாரில் எந்த உண்மையும் இல்லை என பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஊழியர் கூட்டமைப்பு கொடுத்த லஞ்ச புகாரில் உண்மை இருந்தால் நேரில் வந்து ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என கூறியுள்ளார். மாணவர்களின் நலனுக்காகவே  பாடப்பிரிவுகள் மூடப்பட்ட கல்லூரி பட்டியலை வெளியிடவில்லை என விளக்கமளித்தார்.

Related Stories: