சென்னை: தமிழகம் முழுவதும் இருந்து 46 ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 46 ரயில் நிலையங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கி முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் அரசு இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.