இ - கையெழுத்துடன் பிறப்பு, இறப்பு சான்று: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:   சென்னை மாநகராட்சியில் 1930ம் வருடம் முதல் தற்போது வரையில் நிகழும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. 2007ம் வருடம் முதல் இணையதளத்திலிருந்து பொதுமக்கள் சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படுகின்ற சான்றிதழ்களில் மாநகர சுகாதார அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் ஆகியோரின்  facsimile  கையொப்பத்துடன் காணப்படும்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பதிவு செய்யப்படுகிற  அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின்   இ - கையெழுத்துடன் வழங்கப்படும். பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலிருந்து சான்றிதழ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: