மகன் கண்முன் பரிதாபம் லாரி மோதி பெண் பலி

வேளச்சேரி: மேடவாக்கம், தில்லை கங்கா தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). நேற்று முன்தினம் அதே பகுதியில்  உள்ள பள்ளிக்கு தனது மகனுடன் சென்றார். பின்னர் இருவரும் வீடு திரும்புவதற்காக மாம்பாக்கம் மெயின் சாலையை கடந்து உள்ளனர். அப்போது பள்ளிக்கரணையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மினி லாரி ஜெயலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி நேற்று இறந்தார். இந்த விபத்தில் ஜெயலட்சுமியின் மகன் அதிர்ஷ்டவசமாக காயமில்லாமல் தப்பினார்.  இதுகுறித்து மவுன்ட் போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார்  விசாரிக்கின்றனர்.

Related Stories: