சென்னை: அடையாறு, பெரம்பூர் கோட்டத்தில் நாளை, நாளை மறுதினம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது, என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (6ம் தேதி) காலை 10.30 மணிக்கு அடையாறு செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, தரமணி துணைமின் நிலைய வளாகம், அடையாறு, சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது.