அழகி போட்டி ரத்து: நடிகை மீரா மிதுன் கண்ணீர் பேட்டி

சென்னை: 8 தோட்டக்காள். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இவர் 2016ம் ஆண்டு நடந்த மிஸ்.சவுத் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர்  தனியாக அழகி போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்தார். இதனை சிலர் தடுப்பதாவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் மீரா மிதுனுக்கு தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்கிய அமைப்பு திரும்ப  பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. மீரா மிதுன் நேற்று வட பழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அழகி போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால் அந்த போட்டி நடக்கவில்லை.

 இதுகுறித்த அவா் நிருபர்களிடம் கூறியதாவது:ஒரு அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில் முதலில் ஒத்துக் கொண்டிருந்த ஒருங்கிணைப்பாளர், நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று இரண்டு போலிஸ் அதிகாரிகளை அழைத்து  வந்து என்னை  பயமுறுத்தினார்.  நிகழ்ச்சியை நடத்த விடாமல் ஹோட்டலில் வைத்து மிரட்டினார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று   தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன். தமிழ்ப்பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன்.   நடத்த விடாமல் செய்துவிடார்கள். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சிக்காக  இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்பட்டி அனைத்தும் எனக்கு  சாதகமாக இருந்தும் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். நான் ஓய்ந்து போக மாட்டேன். கண்டிப்பாக ஜெயித்து காட்டுவேன் என்று கண்ணீருடன் கூறினார்.

Related Stories: