சென்னை: சென்னையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதமாகின. சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலாக இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, தீ விபத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், 14 இயந்திரங்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்பட்டுள்ளது. தகவல் அரிது விரைந்து வந்த போலீசார் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்வெர்ட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.