அண்ணாநகர்: அண்ணாநகர் மேற்கு, 18வது மெயின் ரோட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செந்தில்முருகன் (42). இவர் நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண் ஊழியரை காதலிக்கும்படி ரஞ்சித் என்ற வாலிபர் தொல்லை கொடுத்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ரஞ்சித், அந்த பெண் ஊழியரிடம், தன்னை காதலிக்கும்படி கூறியுள்ளார். அவர் மறுத்ததால், ரஞ்சித் ரகளையில் ஈடுபட்டார்.