நித்திரவிளை: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறையை சேர்ந்தவர் ஷிபு (40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஷிபு உட்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 பேர், கேரளாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 20 பேர் மே மாதம் 2ம் தேதி கொச்சியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 18ம் தேதி தித்திரா தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு விசைப்படகு பழுதடைந்துள்ளது. உடனே மற்ற படகில் இருந்தவர்கள் பழுதடைந்த படகை கரைக்கு இழுத்து வந்தனர். நேற்று மற்றொரு படகும் பழுதடைந்தது.