சென்னை: தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை 2019ன், வரைவு அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் மும்மொழி கொள்கை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.