பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடையில் அனுமதியின்றி செயல்பட்ட ஒரு தனியார் ரிசார்ட்டில், பெண்களை ஆபாசமாக நடனமாட வைத்து மதுவிருந்து நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆனைமலை, அதனை சுற்றியுள்ள தனியார் ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.