சென்னை: தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கீகாரம் புதுப்பிக்காத தனியார் புள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த மாதம் அறிவித்து இருந்தது. அதன் பேரில் தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பட்டியல் அனுப்பியுள்ளனர். இதன் பேரில் மாவட்ட வாரியாக நர்சரி பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளை மூடும் பணியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.