சென்னை: முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வாருங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், என்ஜிஓக்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.