சென்னை: கடந்த ஆண்டு பருவ மழை பொய்ந்துபோனதால் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் கருகி, இலைகள் உதிர்ந்து எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கின்றன. செடிகள் அனைத்தும் காய்ந்து கருவாடாக போனது. கால்நடைகள் தண்ணீர் இல்லாததால், அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில், திருத்தணி பகுதியில் நாளுக்கு நாள் வெயில் உக்கரம் அதிகரிக்க அனல் காற்று விசியது.இதனால், பொதுமக்கள் வெளியில் தலை காட்டவே அஞ்சி வீடுகளில் முடங்கினர். இந்த வெயில் காரணமாக திருத்தணி நகரத்திலும், சுற்று வட்டார கிராமங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.