பொள்ளாச்சி அருகே காட்டு யானையை விரட்டுவதற்காக கும்கிகள் வந்தன

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு முருகன் என்பவரின் 7 வயது மகள் ரஞ்சனியை காட்டுயானை தாக்கி கொன்றது. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே தூங்கிய மாகாளி என்ற தொழிலாளியையும் மிதித்து கொன்றது.  

இதையடுத்து காட்டு யானையை, விரட்ட நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பரணி என்ற கும்கியை வரவழைத்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் நவமலைக்கு வந்த காட்டுயானையை வனத்துறையினர் கும்கியை கொண்டு அடர்ந்த வனத்துக்குள் விரட்டினர். இருப்பினும், காட்டு யானை மீண்டும் வந்தால் விரட்ட, சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானையை நேற்று மதியம் வரவழைத்துள்ளனர்.

Related Stories: