சென்னை: சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் பயணிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி கிடைக்க காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சார செலவீனத்தை குறைக்க மற்றும் தண்ணீர் சிக்கனத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.