அபுஜா: நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டு வருகிறது. இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.