சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இன்னும் 8 நாட்களில் முடிய உள்ள நிலையில், வட மாநிலங்களில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணி, கரூர் ஆகிய இடங்களில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூரில் 107 டிகிரி, மதுரை, திருச்சி 106 டிகிரி, பாம்பன், சேலம் 104 டிகிரி, சென்னை, நாமக்கல், தர்மபுரி 102 டிகிரி வெயில் நிலவியது. இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை, குறிப்பிடும்படியாக நேற்று பெரும்பாலான இடங்களில் பெய்யவில்லை.