துரைப்பாக்கம்: இசிஆர் பனையூர் கடற்கரையில் ஐ.டி ஊழியர்களை தாக்கிய2 போலீஸ் காரர்களை பணி இடமாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். திருவான்மியூர் நீதிபதிகள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25). ஐடி ஊழியர். மலையேறும் பயிற்சி பெற்று சிறுவர்களுக்கு மலையேறும் பயிற்சி அளித்து வருகிறார். இவரது நண்பர் சத்தியமங்கலத்தை சேர்ந்த யஷ்வந்த் (27). இருவரும் கடந்த 16ம் தேதி இசிஆர் பனையூர் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் எப்படி மலையேறுவது? டெண்ட் எப்படி அமைப்பது? போன்றவை குறித்து செய்துக்காட்டி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கானத்தூர் காவல் நிலைய போலீஸ்காரர்கள் பாலசுப்ரமணியன் (25) மற்றும் தணிகாசலம் (27) ஆகியோர் இவர்களிடம் விசாரித்தனர்.