லாரி மோதி வாலிபர் பலி

அண்ணாநகர்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு வழியாக பைக்கில் சென்றபோது, மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனியார் குடிநீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தினேஷ்குமார் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தினேஷ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார்.

Related Stories: