திருவள்ளூர்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்கள் மற்றும் ஏலியம்பேடு, ஆளாடு, வயிரவன் குப்பம் ஆகிய இடங்களி்ல அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெண்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.