கரூர்: பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 12ம் தேதி பள்ளபட்டியில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கினார். அப்போது ஒருவர் மேடையை நோக்கி செருப்பையும், முட்டையையும் வீசினார். அதற்குள் கமல் வேனில் ஏறி சென்று விட்டார். செருப்பு வீசியவரை மநீம தொண்டர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை போலீசார் மீட்டு விசாரித்தனர்.