சென்னை: பைக் மீது மற்றொரு பைக் உரசிய தகராறில் ஓட்டல் ஊழியரை கத்தியால் குத்திய பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செம்பரங்குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தி.நகர் பர்கிட் சாலையில் பைக்கில் சென்றபோது, முன்னால் 2 பேர் சென்று கொண்டிருந்த ஒரு பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில், விக்னேஷை இருவரும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.