சென்னை, மே 16: கோயம்பேடு பகுதிக்கு மினி வேன்களில் நேற்று காலை வந்த தரமற்ற 600 தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை நகர பகுதிகளில் காலாவதியான, தரமற்ற தண்ணீர் கேன்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத, தரமற்ற தண்ணீர் கேன்கள் சென்னை நகரில் விற்பனைக்கு மினி வேன்களில் கொண்டு வரப்படுவதாக ேநற்று காலை 6 மணியளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று காலை 8 மணியளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் 3 பேர் குழுவினர், அவ்வழியே மினி வேன்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்தனர்.