சென்னை: தமிழகத்தில் ஜூன் 6 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால், ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. www.tn.health.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.