நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவில் பிரசித்திப்பெற்ற செடில் உற்சவம் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில், இன்று முக்கிய நிகழ்வான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போதும் காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். குழந்தை வரம் வேண்டியவர்கள் தம் பிராத்தனை நிறைவேறிய பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தங்களது குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்க வைப்பனர்.