ஏடிஎம் கொள்ளை வாலிபரிடம் விசாரணை

அண்ணாநகர்: செங்குன்றத்தை சேர்ந்தவர் ராஜா (30). இவர், கடந்த 2017ம் ஆண்டு அயனாவரம், ராஜமங்கலம், ஐசிஎப் போன்ற பகுதி ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து ₹26 லட்சத்தை கொள்ளையடித்து  விட்டு தப்பினார். இதனிடையே, கடந்தாண்டு கோவையில் உள்ள ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து ராஜா ₹56 லட்சத்தை கொள்ளையடித்தார். இந்த வழக்கில் கோவை போலீசார், ராஜாவை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.அவரை ஐசிஎப் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: