சென்னை: ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ₹1 கோடி பறித்து கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொரட்டூரை சேர்ந்தவர் முகமது தாஹிர் (48), ரியல் எஸ்டேட் அதிபர். போரூர் அருகே உள்ள 110 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கி தரும்படி சிலர், முகமது தாஹிரிடம் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஒரு தொகையை அவரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அதன்படி, முகமது தாஹிர் பட்டா வாங்கித் தரவில்லை என தெரிகிறது.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு முகமது தாஹிரை, பணம் கொடுத்தவர்கள் அழைத்தனர். அதன்படி, அவரும் அந்த ஓட்டலுக்கு வந்தார். அப்போது, கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர்.