திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. திருப்பத்தூர் அருகே சிம்மனபுதூர் கோடியூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு ஆலமரம் இருந்தது. இந்த மரத்தின் அடியில் உள்ள வேடியப்பன் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.