சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே காரணமாக வெப்பச்சலனம் காரணமாக வேலூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டஙகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.