சென்னை: கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலைமறியல், போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நாசமாயின. இந்த பேரழிவுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதையடுத்து, தங்களது வீடுகள், நிலங்கள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது, போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.