தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர் படுகாயம்

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விவேக் (20). தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீஸ்காரராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இவர், பணி முடிந்து நேற்று காலை வீட்டிற்கு புறப்பட்டார். சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

உடனே விவேக் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஒதுங்கி நின்றுள்ளார். ஆனால் ரயில் சென்ற வேகத்தில் ஏற்பட்ட காற்றின் அழுத்தத்தால் விவேக் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி பயணிகள் சிலர் எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: