வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை: சத்யபிரதா சாஹு

சென்னை: வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.  மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: