சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்கள், செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
கோயில்களுக்கு வருகைபுரியும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் கோயில் வளாகங்களில் மற்றும் மண்டபங்களில் ஆங்காங்கே நிறுத்துவதாகவும், இதனால் கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு கோயில் உள்ளே நுழைய இடையூறு ஏற்படுவதாகவும் இவ்வலுவலக கவனத்திற்கு வரப்பபெற்றுள்ளது. எனவே, இடையூறுகள் ஏற்படா வண்ணம் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் கோயிலின் உள்ளே தங்கு தடையின்றி சென்று வருவற்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் பின்பற்றி வாகனங்களை நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்ளப்படுகிறது.