நடிகர் பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்

சென்னை: நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக ஜெயங்கொண்டான் எனபவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக பார்த்திபன் வீட்டில் பணிபுரிந்த ஜெயங்கொண்டான், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நடிகர் பார்த்திபன் மீது புகார் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயங்கொண்டான் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்து கேட்க சென்றபோது பார்த்திபன் தாக்கியதாக ஜெயங்கொண்டான் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: