மதுரை: மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை டி.பி.கே. பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது சென்னையை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் போலீசார் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். திருமங்கலத்தில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. மதுரை நகருக்குள் இந்த பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பை மீறி நிலைதடுமாறி சென்றுள்ளது. வேகமாக சென்ற பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு பைக்குள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் சிறுமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.