சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்வதாக கண்டெய்னர் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 கண்டெய்னரை சோதனை நடத்தியபோது, அதில் ஆடைகளுக்கு இடையே 14 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ₹4.5 கோடி மதிப்புள்ள 30 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.