சென்னை : தமிழகம் முழுவதும் பல கோவில்களில் மழை வேண்டி அறநிலையத்துறை சார்பில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 16 கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதேபோல், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் மழை வேண்டி சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண யாகம் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட சிவசாரியார்கள் கலந்து கொண்டனர்.