நாங்குநேரி: நெல்லை அருகே சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்ததில், சென்னை போலீஸ் இணை கமிஷனரின் தந்தை பலியானார்.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்துள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசபாபதி (67). ஓய்வுபெற்ற ரயில்வே டிக்கெட் பரிசோதகர். ஊர் தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ரத்னா (65). இவர்களது மகன் சுதாகர் சென்னையில் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அருண் பிரசாத்(35), சென்னையில் கிரானைட் வியாபாரம் செய்து வருகிறார். ரத்தினசபாபதி குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். ஊர் தலைவர் பொறுப்பு வகித்து வருவதால் அவர் அடிக்கடி சொந்த ஊர் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கோயில் விழாவுக்காக ரத்தினசபாபதி, மகன் அருண் பிரசாத், அவரது மனைவி பிரவீணா (29), குழந்தை லியா (2), உறவினர் ரமேஷ் (28) ஆகியோர் காரில் சீதப்பாலுக்கு புறப்பட்டு வந்தனர். காரை அருண்பிரசாத் ஓட்டி வந்தார்.