டெல்லி: லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தங்கள் தரப்பு மருத்துவரையும் பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என்றும் மகன் ரோஹின்குமார் தெரிவித்துள்ளார்.