நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் டாக்டர், நர்சுகள் உட்பட 8 பேரிடம் சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 8 பேர் கைதாகி உள்ளனர். வழக்கின் மேற்பார்வையாளராக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை, நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள அலுவலகம் வந்து, விசாரணை நடத்தினார். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதபிரியா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் உட்பட 8 பேரிடம், அவர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை இரவு 7 மணி வரை நடைபெற்றது.