சோளிங்கர்: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக எந்த கோயில்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி மலைக்கோயில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லிசன் பெர்னாண்டஸ் ஆய்வு மேற்கொண்டார்.