ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 12வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை பொது குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், பல இடங்களில் குழாய்களில் குறைவான அளவு தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலந்தூர் குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் தனசேகரன் மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஆலந்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.