ஆற்காடு: மணல் கடத்தலை தடுத்த வருவாய் துறையினர் மீது கார் ஏற்றி கொல்ல முயணுசி நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் அருகே சொறையூர் பகுதியில் உள்ள கமண்டல நாக நதியில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றிச் செல்வதாக ஆற்காடு தாசில்தார் வத்சலாவிற்கு கடந்த 2ம் தேதி இரவு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், விஏஓக்கள் விக்னேஸ்வரன் (சொறையூர்), கபிலன் (கே.வேளூர்), சரண்ராஜ் (வளவனூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் சொறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் 2 லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டு இருப்பதை கண்டு அங்கு சென்றனர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். பின்னர், அதிகாரிகள் அங்கு சோதனை செய்து கொண்டிருந்தனர்.