வேளச்சேரி: பீகாரை சேர்ந்தவர் ரவீந்திர மொகாதோ (34). இவர், சென்னையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் சார்பில், மேடவாக்கத்தில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ரவீந்திர மொகாதோ காற்றுக்காக ஷெட்டின் வெளியில் படுத்து தூங்கினார். அப்போது தண்ணீர் லாரி ரிவர்ஸில் வந்தபோது, ரவீந்திர மொகாதோ மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.