அம்பத்தூர்: கொரட்டூர் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்துள்ளதால் பயணிகள் தாகம் தணிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிவலிங்கபுரம், சீனிவாசபுரம், அக்ரகாரம், பாலாஜி நகர், குமரன் நகர், தில்லை நகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை மாநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அனைத்து வசதிகளுடன் கொரட்டூர் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ₹10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பயணிகள் சுத்தமான குடிநீரை அருந்தி வந்தனர்.