சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (50). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர். செங்குன்றத்தில் இருந்து தேர்வாய் செல்லும் அரசு பேருந்தில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் செங்குன்றத்தில் இருந்து தேர்வாய்க்கு புறப்பட்ட பேருந்தில் செல்லையா பணியில் இருந்தார். தச்சூர் கூட்டு சாலை அருகே சென்றபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.